கோழி இறைச்சி உண்ட எலி; உணவகத்துக்குத் தடை

கோழி இறைச்சி உண்ட எலி; உணவகத்துக்குத் தடை

1 mins read
42e55d19-c47e-4839-88e4-8b915294ed33
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யத் தலை­நகர் கோலா­லம்­பூ­ரின் ஓர் உண­வ­கத்­தில் எலி ஒன்று பொறித்த கோழி இறைச்­சியை உண்­ணும் காட்சி காணொ­ளி­யில் பதி­வானது. அந்­தக் காணொளி சமூக ஊட­கங்­களில் அதி­கம் பகி­ரப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து மலே­சி­யா­வின் சுகா­தார சோத­னைக் குழு ஒன்று பாண்­டான் இண்டா பகு­தி­யில் அமைந்­துள்ள அந்த உண­வ­கத்­தில் சோதனை நடத்­தி­யது. 14 நாள்­க­ளுக்கு உண­வ­கத்தை மூடுமாறு கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

உண­வ­கத்­தில் சுத்­தம் சரி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டா­த­தால் அவ்­வாறு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.