மட்ரிட்: ஸ்பெயினில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் குறைந்தது அறுவர் மாண்டனர், இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
பேருந்தின் 63 வயது ஓட்டுநரும் பெண் பயணி ஒருவரும் விபத்தில் உயிர் தப்பிய இருவர். காயமடைந்த அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்து ஓட்டுநர் மதுபானமோ போதைப்பொருளோ உட்கொள்ளவில்லை என்பது பரிசோதனைகளில் தெரியவந்ததெனக் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆகக் கடைசி நிலவரப்படி மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறப்பட்டது.

