இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல 'மேரியட்' ஹோட்டல் தாக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. விடுமுறைக் காலத்தில் எந்நேரமும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தூதரகம் குறிப்பிட்டது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க ஊழியர்கள் அனைவருக்கும் அந்த ஹோட்டலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக இஸ்லாமாபாத்தில் சென்ற வாரம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மூவர் மாண்ட அச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடடிக்கை எடுக்கப்படுகிறது.

