கோத்தகினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் அமைந்துள்ள கடல்நீர் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட உயர் கடல் அலையால் அங்கிருந்த 108 வீடுகள் இடிந்து விழுந்தன.
சனிக்கிழமை எழுபது வீடுகளும் ஞாயிற்றுக்கிழமை 70 வீடுகளும் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் உயர் கடல் அலை நிகழலாம் என்றும் அதனால் மேலும் அதிகமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடுகளில் வசித்த 600க்கு மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை. அங்கு உயர் கடல் அலை என்னும் பொங்கு ஓதம் வருவது இயல்பு. ஆனால் இதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வரும் பேரலை 'கிங் டைட்' என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற பேரலை ஆண்டுக்கு ஓரிரு முறை இப்பகுதியில் நிகழும் என்றும் கூறப்படுகிறது.

