தெஹ்ரான்: ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் 25 வயது நூர் முகம்மட்ஸாடேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நூர் முடிவெடுத்தார்.
அவரது மேல்முறையீட்டு மனுவை ஈரானிய உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் விளைவாக நூரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நூர் மறுத்துள்ளார்.
அதிகாரிகள் தம்மை வற்
புறுத்தி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வைத்ததாக நூர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தலையங்கி அணியாததற்காக தடுத்துவைக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணத்தை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் உள்ள பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஈரான் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது.

