பிரதமராக முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் அன்வார்

பிரதமராக முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் அன்வார்

1 mins read
75b80859-a202-4cd3-8a8b-9d09289d321a
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­ம­ராகத் தமது முதல் அதி­கா­ரத்­

து­வப் பய­ணத்தை மேற்­கொள்ள இருக்­கி­றார் அன்­வார் இப்­ரா­கிம்.

இம்­மா­தம் 8ஆம் தேதி­யன்று அவர் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் செல்கிறார்.

அந்த இரண்டு நாள்

அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின்­போது அவர் இந்­தோ­னி­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வைச் சந்­தித்­துப் பேசு­வார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியா-இந்தோனீசியா எல்லை வரை­யறை, வர்த்­த­கம், மனி­த­வ­ளம், செம்­பனை எண்­ணெய் ஆகி­யவை தொடர்­பாக இரு­நாட்­டுத் தலை­வர்­களும்

கலந்­து­ரை­யா­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்துடன் மியன்­மா­ரில் நில­வும் அர­சி­யல் நெருக்­க­டி­நிலை குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­படும் என்று நம்­பப்­ப­டு­கிறது,

இவ்­வாண்டு ஆசி­யா­னுக்கு இந்­தோ­னீ­சியா தலைமை வகிக்­கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிர­த­மர் அன்­வா­ரு­டன் மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ஸாம்­பிரி அப்­துல் காதர் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்­கி­டையே, கிட்­டத்­தட்ட ஒரு மாதத்­துக்கு முன்பு மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்ற பிறகு, திரு அன்வார் நேற்று முதன்­மு­றை­யாக ஜோகூர்

மாநி­லத்­துக்­குச் சென்­றார்.

அங்கு ஜோகூர் மன்­னர் இப்­ரா­கிம் இஸ்­கந்­தரை அவ­ரது அரண்­ம­னை­யில் சந்­தித்­தார். அப்­போது ஜோகூர் பட்­டத்து இள­வ­ர­ச­ரும் அங்கு இருந்­த­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­பி­றகு, ஜோகூர் மாநில முதல்­வர் ஓன் ஹஃபிஸ் காஸியை அன்வார் சந்தித்தார்.