கோலாலம்பூர்: உணவகத்தில் உணவு பரிமாறுபவரின் காரின்மீது பொட்டலம் ஒன்று விட்டுச் செல்லப்பட்டது.
அந்த பொட்டலம் வெடித்துச் சிதறியதில் அந்த ஆடவர் மாண்டார்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமையன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்தது.
இதைக் கொலை வழக்கு என மலேசியக் காவல்துறை வகைப்
படுத்தி விசாரணை நடத்தி வருகிறது. அம்பாங்கில் உள்ள பாண்டான் இன்டா பகுதியில் அந்த 28 வயது ஆடவரின் வேலையிடத்துக்கு வெளியே இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தமது காரின்மீது விட்டுச்செல்லப்பட்ட பொட்டலத்தை அந்த ஆடவர் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரவு 8.55 மணி அளவில் அது வெடித்தது.
அந்த ஆடவருக்கு உடலிலும் கைகளிலும் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டதாக அம்பாங் ஜெயா காவல்துறை கூறியது.
அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
சம்பவ இடத்தைச் சுற்றி காவல்துறையினர் தடுப்பு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் ரத்த திட்டுகள் தென்பட்டதாகவும் மாண்ட ஆடவரின் காரின் முன்பகுதி சேதமடைந்திருந்ததாகவும்
செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

