பிராக்: செக் குடியரசில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கடந்த வாரம் கண்டு
பிடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு அந்நாட்டில் அத்தகைய பெரும் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பண்ணையில் இருக்கும் கிட்டத்தட்ட 200,000 கோழிகளை அழிக்க அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டின் விலங்கு மருத்துவ ஆணையம் கூறியது.

