விமான நிறுவனங்கள் அதிருப்தி

1 mins read

பாரிஸ்: சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கான எல்­லைக் கட்டுப்­பா­டு­க­ளைப் பல நாடு­கள் முடுக்­கி­விட்டு வரு­கின்­றன. அனைத்­து­லக விமா­னத் துறை­யை­பைப் பிர­தி­நி­திக்­கும் அமைப்­பான 'ஐஏ­டிஏ' எனும் அனைத்­து­லக ஆகா­யப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம் அதற்­குக் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த மூவாண்­டு­க­ளாக கொள்­ளை­நோய்ப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த இது­போன்ற நட­வடிக்­கை­கள் பல­ன­ளிக்­க­வில்லை; அப்­ப­டி­யி­ருந்­தும் பத­றி­யபடி அவை மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படு­வ­தாக சங்­கம் கூறி­யது.

நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் அது இதைக் குறிப்­பிட்டது.

சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­களுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ள­வேண்­டும் என்­பது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் உறுப்பு நாடு­க­ளின் ஒரு­மித்த கருத்து என்று முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி ஐரோப்­பிய ஒன்­றிய உறுப்பு நாடு­க­ளான இத்­தாலி, பிரான்ஸ் மட்­டுமே சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­கள் பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தைக் கட்­டா­ய­மாக்­கின. அனைத்து உறுப்பு நாடு­களும் சம­மாக முடி­வெ­டுக்­க­வேண்­டும் என்று பிரான்ஸ் ஊக்கு­வித்­தது. அதன் தொடர்­பில் நேற்று அவ­சர சந்­திப்பு நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்டிருந்­தது.

இந்­நி­லை­யில், சீனா­வி­லிருந்து வரும் விமா­னங்­க­ளின் கழிவு நீரைச் சோதிக்­கப்­போ­வ­தாக ஐரோப்­பிய ஒன்­றிய உறுப்பு நாடான ஆஸ்­தி­ரியா தெரி­வித்­தி­ருந்­தது.

முடுக்கிவிடப்படும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள்