சாக்ரமென்டோ: கலிஃபோர்னியா சாக்ரமென்டோவில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடை
பட்டது.
இடைவிடாது பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.
இதன் தொடர்பில் மாண்ட இருவரில், ஒருவர் பச்சிளம் குழந்தை.
அக்குடும்பம் வசித்து வந்த தற்காலிக வீட்டில் மரம் விழுந்ததால் ழந்தை மாண்ட
தாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எதிர்பார்த்ததைவிட வெள்ளமும் இழப்பும் குறைவாக இருக்கிறது. என்றாலும், தொடர்ந்து கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் முனனெச்சரிக்கை செய்துள்ளனர்.

