பெரும்பான்மையை திரட்ட கட்சிகள் தீவிரம்

பெரும்பான்மையை திரட்ட கட்சிகள் தீவிரம்

2 mins read
ff2bd794-3dfd-4b34-b904-5e2a40b29583
படம்: பிக்ஸாபே -

கோத்தா கின­பாலு: சாபா பாரி­சான் நே‌ஷ­னல் தனது ஆத­ரவை விலக்­கிக்கொண்­ட­தைத் தொடர்ந்து சாபா மாநில அர­சாங்­கம் பெரும்­பான்­மையை இழந்­தது.

சாபா­வில் கடந்த 27 மாதங்­களாக கபுங்­கான் ரக்யாட் சாபா (ஜிஆர்­எஸ்), பாரி­சான் நே‌ஷ­னல் ஆகி­ய­வற்­றின் கூட்­டணி ஆட்சி நடை­பெற்­றது. இந்­நி­லை­யில், தனது கட்சி அளித்து வந்த 17 பேரின் ஆத­ர­வைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­வ­தாக சாபா பாரி­சான் நே‌ஷ­னல் தலை­வர் புங் மொக்­தார் ராடின் நேற்று முன் தினம் இரவு அறி­வித்­தார்.

"பிர­தான பெர்­சத்­து­வில் இருந்து சாபா பெர்­சத்து வில­கி­ய­தால், முத­ல­மைச்­சர் ஹாஜிஜி அப்­ப­த­வி­யில் நீடிக்­கும் தகு­தியை இழந்­து­விட்­டார்," என்­றார் அவர்.

79 தொகு­தி­க­ளைக் கொண்ட சாபா­வில் ஆட்சி அமைக்க 40 இடங்­கள் தேவை. முந்­திய தேர்­த­லின்­போது, 29 இடங்­களை வென்­றி­ருந்த ஜிஆர்­எஸ் 17 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டி­ருந்த பாரி­சான் நே‌ஷ­ன­லு­டன் கூட்­டணி சேர்ந்­தது. ஹாஜிஜி நூரை முத­ல­மைச்­ச­ராக கொண்டு அந்­தக் கூட்­டணி அர­சாங்­கத்தை நடத்தி வந்­தது.

தற்­போது, ஆத­ரவை விலக்­கிக் கொண்­டுள்ள பாரி­சான், முக்­கிய எதிர்­க்கட்­சி­யான வாரி­சா­னு­டன் இணைந்து ஆட்சி அமைக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வாரி­சான் (18), பாரி­சான் (17) கூட்­டணி 36 இடங்­களை மட்­டுமே கொண்­டி­ருந்­தா­லும் மற்ற சிறிய கட்­சி­கள் மூலம் தேவை­யான பெரும்­பான்­மையை திரட்ட பாரி­சான் முயற்­சிக்­கும்.

ஆனால், இந்­தக் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வ­ளிக்க போவ­தில்லை என்று பக்­கத்­தான் ஹரப்­பான் (7) கூறி­யுள்­ளது. அதே­ச­ம­யம் வாரி­சா­னும் (29), பக்­கத்­தா­னும்­கூட (7) 36 பேரின் ஆத­ர­வைக் கொண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்கது.

இருப்­பி­னும், ஒற்­றுமை அர­சாங்­கம் அமைக்க பக்­கத்­தான் ஹரப்­பான் முன்­மொ­ழிந்­துள்­ளது. சாபா சட்­ட­மன்­றத்­தைக் கலைப்­ப­தில் தங்­க­ளுக்கு உடன்­பா­டில்லை என்­றும் அத­னால், பக்­கத்­தா­னின் ஏழு சாபா உறுப்­பி­னர்­கள் முத­ல­மைச்­சர் ஹாஜி­ஜிக்குத் தொடர்ந்து ஆத­ர­வ­ளிப்­ப­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

இதற்கிடையே, பாரிசானில் அங்கம் வகிக்கும் அம்னோவின் 5 உறுப்பினர்கள் ஹாஜிஜிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதோடு, சாபா அம்னோ தலைவர் பதவியில் இருந்து புங் மோக்தார் விலகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.