தாக்கா (செனகல்): ஆப்பிரிக்க நாடான செனகலின் மத்தியப் பகுதியில் நேர்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் மாண்டதாகவும் 87 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஃப்ரீன் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதால் விபத்து நேர்ந்தது.
செனகலின் மீட்புப் பணி அதிகாரி ஒருவர் இச்சம்பவம் குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தகவல் தந்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் விபத்துக்கு உள்ளான பேருந்துகள் அகற்றப்பட்டதாகவும் அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

