இந்தோனீசியாவின் மனித உரிமை மீறல்கள்: வருந்தும் அதிபர்

இந்தோனீசியாவின் மனித உரிமை மீறல்கள்: வருந்தும் அதிபர்

1 mins read
cfb9e3c9-d8f9-43a3-935b-60cf53657c26
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் வர­லாற்­றில் பல மோச­மான மனித உரிமை மீறல் செயல்­கள் இடம்­பெற்­றி­ருப்­பதை ஜோக்­கோவி என்­ற­ழைக்­கப்­படும் அந்­நாட்டு அதி­பர் ஜோக்கோ விடோடோ ஒப்­புக்­கொண்­டுள்­ளார். 1965, 1966ஆம் ஆண்­டு­களில் நிகழ்ந்த சில மோச­மான சம்­ப­வங்­கள் அவற்­றில் அடங்­கும்.

இந்­தோ­னீ­சி­யா­வில் 1965ஆம் ஆண்­டின் இறு­தி­யில் தொடங்­கிய வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் குறைந்­தது 500,000 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று வர­லாற்று ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்­டோர் கணித்­துள்­ள­னர். அந்த கால­கட்­டத்­தில் அந்­நாட்டு ராணு­வம் ஆட்­சிக் கவிழ்ப்­பில் ஈடு­பட்­டது. ஜென­ரல் பத­வி­யில் இருந்த சுகார்த்தோ அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­றார். கம்­யூ­னிஸ்ட்­டு­கள் என்று சந்­தே­கிக்­கப்­பட்ட கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் மக்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

"தெளி­வான சிந்­த­னை­யு­ட­னும் மன­சாட்­சி­யு­ட­னும் தேசத்­தின் தலை­வ­ராக இருக்­கும் நான், பல நிகழ்­வு­களில் மோச­மான மனித உரிமை மீறல்­கள் இடம்பெற்றதை ஒப்­புக்­கொள்­கி­றேன்," என்­றார் திரு விடோடோ.

"அத்­த­கைய மனித உரிமை மீறல்­கள் நிகழ்ந்­ததை எண்ணி நான் மிக­வும் வருந்­து­கி­றேன்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தமது ஆட்­சி காலத்திற்கு முன்பு 1965ஆம் ஆண்­டி­லி­ருந்து 2003ஆம் ஆண்­டுக்கு இடைப்­பட்ட காலத்­தில் நேர்ந்த மேலும் 11 மனித உரிமை மீறல் செயல்­களைத் திரு விடோடோ குறிப்­பிட்­டார். 90களின் பிற்­ப­கு­தி­யில் திரு சுகார்த்­தோ­வின் ஆட்­சிக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் நடத்­திய மாண­வர்­கள் கடத்­தப்­பட்­டது, கொல்­லப்­பட்­டது அத்­த­கைய செயல்­களில் அடங்­கும்.

நியா­ய­மான முறை­யில் சட்­ட­ரீதி­யான அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு பாதிக்­கப்­பட்­டோ­ரின் உரி­மை­களை மீட்­டுத் தரத் தமது அர­சாங்­கம் முயற்சி செய்­யும் என்று திரு விடோடோ கூறி­னார்.