பேங்காக்: இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளிடமிருந்து சுற்றுப் பயணக் கட்டணமாக ஆளுக்கு 300 பாட் (11.90 வெள்ளி) தொகையைப் பெற தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் சுற்றுப் பயணிகளுக்கு உதவவும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தவும் அந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறை அமைச்சர் ஃபிஃபாட் ரட்சகிட்பிரக்கார்ன் நேற்று தெரிவித்தார்.
வேலை அனுமதி அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருப்போர் புதிய சுற்றுப்பயணக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்பதையும் திரு ஃபிஃபாட் குறிப்பிட்டார்.

