பெய்ஜிங்: தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு எதிராகத் தான் விதித்துள்ள கட்டுப்பாடுகளை சீனா தற்காத்துப் பேசியுள்ளது.
ஜப்பான், தென்கொரியா செல்லும் சீனாவைச் சேர்ந்தோர் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அதற்குப் பதிலடியாக அவ்விரு நாட்டவருக்கும் குறுகிய காலத்துக்கான விசா வழங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, குறைந்த விலையில் கொவிட்-19 மருந்துகளைப் பெற சீனா முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. கொவிட்-19 மருந்து வகைகளைத் தயாரிக்கும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஃபைசர், மெர்க் ஆகியவை அதை எதிர்ப்பதுபோல் தெரிகிறது.
மொல்னுப்பிரவிர் என்ற கொவிட்-19 மருந்தை மெர்க் நிறுவனம் தயாரக்கிறது. பேக்ஸ்லாய்ட்டைத் தயாரிக்கிறது ஃபைசர் நிறுவனம்.

