பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாரிஸ் கரே டு நோர்ட் ரயில்வே நிலையத்தில் நேற்று கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் குறைந்தது அறுவர் காயமடைந்தனர்.
ஒருவர் பலத்த காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலை நடத்திய ஆடவரைக் காவல்துறையினர் பலமுறை சுட்டனர். பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆடவரைச் சுட்ட காவல்துறை அதிகாரி அந்த நேரத்தில் பணியில் இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.
தாக்குதல் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ் கரே டு நோர்ட், ஐரோப்பாவில் ஆக அதிக ரயில் சேவைகள் இயங்கும் நிலையங்களில் ஒன்று.

