ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியம் பறிமுதல்

ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியம் பறிமுதல்

1 mins read
b000be62-5f21-4c9f-b2fd-0de802f4b48a
படம்: பிக்ஸாபே -

லண்­டன்: பிரிட்டனில் இங்­கி­லாந்­துத் தலை­ந­கர் லண்­ட­னின் ஹீத்ரோ அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் யுரே­னி­யம் வைக்­கப்­பட்­டி­ருந்த பொட்­ட­லம் ஒன்று பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. அது குறித்து பிரிட்­டிஷ் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சென்ற மாதம் 19 ஆம் தேதி­யன்று நடத்­தப்­பட்ட சோதனை ஒன்­றில் யுரே­னி­யம் இருந்த பொட்­ட­லம் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தா­கக் காவல்­துறை குறிப்­பிட்­டது.

அப்­பொட்­ட­லம் பாகிஸ்­தா­னைச் சேர்ந்­தது. அது ஓமா­னி­லி­ருந்து வந்த விமா­னத்­தில் பிரிட்­ட­னுக்­குக் கொண்டு வரப்­பட்­ட­தாக 'தி சன்' நாளி­தழ் தெரி­வித்­தது.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட யுரே­னி­யத்­தின் அளவு மிக­வும் சிறிது என்­றும் அத­னால் பொது­மக்­க­ளுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்­றும் பிரிட்­டிஷ் காவல்­துறை அதி­காரி ஒருவர் அந்­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.