24 அதிகாரிகள் கடமை தவறியதாகப் புகார்

24 அதிகாரிகள் கடமை தவறியதாகப் புகார்

2 mins read
0c6ca8fd-3983-4f48-9638-ef1427845fa6
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கடந்த அக்­டோ­பர் மாதம் நிகழ்ந்த கூட்ட நெரி­ச­லில் 158 பேர் மர­ண­ம­டைந்த சம்­ப­வத்­தில் 24 அதி­கா­ரி­கள் குற்­றம் சாட்­டப்­பட வேண்­டும் என்று சிறப்பு காவல்­துறை புலன்­வி­சா­ர­ணைக் குழு தெரி­வித்­துள்­ளது.

அந்த அதி­கா­ரி­க­ளின் பெயர்­க­ளை­யும் குழு குறிப்­பிட்­டது. சம்­ப­வம் குறித்து தீர விசா­ரித்த பின்­னர் நேற்று அந்­தக் குழு தனது அறிக்­கையை வெளி­யிட்­டது.

காவல்­துறை, உள்­ளூர் மாவட்ட அலு­வ­ல­கம், தீய­ணைப்­புத் துறை, சோல் பெரு­ந­கர நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் தங்­க­ளது கட­மை­யைச் சரி­வர செய்­யத் தவ­றி­ய­தாக அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதி­கா­ரி­க­ளின் அலட்­சி­யத்­தால் நாட்­டில் இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் ஆக அதி­க­மான உயி­ரி­ழப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் குழு தனது அறிக்­கை­யில் வேத­னையை வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

24 அதி­கா­ரி­களில் 6 அதி­காரிகள்­மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை குழு முன்­வைத்து உள்­ளது.

சம்­ப­வம் நிகழ்ந்த யோங்­சான் மாவட்­டத்­தின் முன்­னாள் தலை­மைக் காவல்­துறை அதி­கா­ரி­யும் மாவட்ட நிர்­வாக அலு­வ­ல­கத்­தின் தலைமை அதி­கா­ரி­யும் அந்த 6 பேரில் அடங்­கு­வர்.

குற்­றம் சாட்­டப்­பட்ட அதி­கா­ரி­க­ளுள் ஒரு­வர் ஏற்­கெ­னவே தமது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

அக்­டோ­பர் 29ஆம் தேதி நடை­பெற்ற ஹாலோ­வீன் திரு­வி­ழாக் கொண்­டாட்­டங்­களில் கிட்­டத்­தட்ட 100,000 பேர் பங்­கேற்­ற­போது கூட்­டத்­தி­ன­ரி­டையே நெரி­சல் ஏற்­பட்­டது. சுரங்க ரயில் பாதை அருகே இருந்த மிக­வும் குறு­கிய சந்­தில் ஒரே நேரத்­தில் ஏரா­ள­மா­னோர் முண்­டி­ய­டித்­துக்கொண்டு சென்­ற­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் நசுங்கி மாண்­ட­னர். மரண எண்­ணிக்கை அடுத்­த­டுத்த நாள்­களில் அதி­க­ரித்து 158ஐத் தொட்­டது.

இர­வு­நே­ரக் கொண்­டாட்­டங் களின் பாது­காப்பு நட­வ­டிக்கை யில் 140 அதி­கா­ரி­கள் ஈடுபடுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

அவர்­களில் பல­ருக்­கு கூட்ட நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் திறன் இல்லை என்று சம்பவம் நடந்த பின்னர் கூறப்­பட்­டது.

சம்­ப­வத்­திற்­காக தென்

கொரிய அதி­பர் யூன் சக்-இயோல் பொது­மக்­க­ளி­டம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டார்.

சம்­ப­வத்­திற்­குக் கார­ண­மான வர்­கள் கடு­மை­யா­கத் தண்­டிக்­கப் படு­வார்­கள் என்று அப்­போது அவர் உறுதி தெரி­வித்­தி­ருந்­தார்.

கூட்டநெரிசலில் 158 பேர் மரணம்: விசாரணை அறிக்கை வெளியீடு