வாஷிங்டன்: இறுக்கமான நிதி நிலவரத்தின் தாக்கத்தை உலக நாடுகள் இனிமேல்தான் உணர உள்ளதாக ஐஎம்எஃப் எனப்படும் அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜீவா தெரிவித்து உள்ளார்.
உலக வளர்ச்சி இவ்வாண்டில் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் விலைவாசி உயர்வின் தாக்கத்தை ஈடுகட்டும் வகையில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன.
அமெரிக்காவில் வீடமைப்பு போன்ற சில துறைகள் தள்ளாடி வருகின்றன. இருப்பினும் வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ளது.
"விலைவாசி உயர்ந்தாலும், இப்போதைக்கு மக்கள் வேலையில் இருந்தாலும் இறுக்கமான நிதி நிலவரம் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் இனிமேல்தான் வெளிப்படும். இதனை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம்," என்றார் அவர்.

