பேங்காக்: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐவரை தாய்லாந்து ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. நாட்டின் வடக்கே உள்ள காட்டுப் பகுதியில் அவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் நேற்று கூறினர். இரண்டு மாதங்களில் நடைபெற்றிருக்கும் மூன்றாவது போதைக் கடத்தல் ஒழிப்பு சம்பவம் இது.
இவ்வாரத் தொடக்கத்தில் ஏற்கெனவே ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிசம்பர் மாதமும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
தாய்லாந்து, லாவோஸ், மியன்மார் ஆகியவற்றின் முக்கோண எல்லை அருகே உள்ள சிங் ராய் மாகாணத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஐவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்பகுதி சட்ட
விரோத போதைப்பொருள் வர்த்தக மையமாக விளங்குகிறது. போதைப்புழக்கம் இந்த வட்டாரத்தில் அதிகமாக இருப்பதை உணர்ந்த ராணுவத் தளபதி, அண்மைய சட்ட அமலாக்க நடவடிக்கைகளை அதிகாரிக்க உத்தரவிட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பணிக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடத்தல்காரர்களை நோக்கி சுட்டபோது அவர்களும் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இருப்பினும் ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் பணிக்குழு கூறியது. இந்தத் துப்பாக்கிச் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது. முடிவில், 500,000 போதை மாத்திரைகளும் ஒரு துப்பாக்கியும் மாண்டவர்
களின் இருப்பிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.

