தோக்கியோ: முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஆடவர்மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டதாக ஜப்பானிய நீதிமன்றம் ஒன்று கூறியது.
கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி திரு அபே துப்பாக்கியால் சுடப்பட்டதும் காவலர்களால் துரத்தி கைது செய்யப்பட்ட 42 வயது டெட்சுயா யாமகாமி (படம்), நீண்டகால உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.
அந்தப் பரிசோதனை இவ்வாரத் தொடக்கத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டார். யாமகாமி கொலைக் குற்றச்சாட்டோடு ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றத்தையும் எதிர்நோக்குவதாக நாரா மாவட்ட நீதிமன்றப் பேச்சாளர்கெனிசிரோ நோமுரா ஏஎஃப்பியிடம் கூறினார். கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

