நேப்பாளத்தில் 72 பேர் பயணம் செய்துகொண்டிருந்த யெட்டி விமானம் விபத்துக்குள்ளானது. விபத்தில் குறைந்தது 44 பேர் மாண்டனர்.
மீட்புப் பணி நடந்து வருகிறது.
விமானத்தில் 68 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏடிஆர் 72 ரக விமானம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போக்காராவுக்கு சென்றுகொண்டிருந்தபோது போக்காரா நகரில் கஷ்கி எனும் வட்டாரத்தில் நொறுங்கியது.
சம்பவ இடத்திலிருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

