வெள்ளம்: பிலிப்பீன்ஸில் பலர் பலி, காயம்

வெள்ளம்: பிலிப்பீன்ஸில் பலர் பலி, காயம்

1 mins read
0d4642d3-11c9-408f-9ad7-826871798847
-

மணிலா: பிலிப்­பீன்­ஸில் ஏற்­பட்­டுள்ள கன­மழை, வெள்­ளம் கார­ண­மாக குறைந்­தது 27 பேர் மாண்­டு­விட்­ட­னர். இந்­நி­லை­யில், கன­மழை தொட­ரும் என்று அந்­நாட்­டின் வானி­யல் மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

கிறிஸ்­து­மஸ் வார­யி­று­தி­

யி­லி­ருந்து பிலிப்­பீன்­ஸின் தெற்கு, மத்­திய தீவு­களில் கன­மழை காண­மாக வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டு­கிறது.

இதன் விளை­வாக ஆயி­ரக்­

க­ணக்­கா­னோர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

குறைந்­தது 11 பேர் காய­ம் அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் மூவ­ரைக் காண­வில்லை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கன­மழை, வெள்­ளம் கார­ண­மாகச் சில பகு­தி­களில் நிலச்­ச­ரிவு ஏற்­படும் அபா­யம் அதி­கம் இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி 83,000க்கும் மேற்­பட்­டோர் துயர்­து­டைப்பு மையங்­களில் தஞ்­சம் அடைந்­துள்­ள­தாக பிலிப்­பீன்ஸ் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. 1,200க்கும் மேற்­பட்ட வீடு­கள் சேத­ம­டைந்­தன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து, கொட்டும் மழையில் சிறு குழந்தைகளைப் பத்திரமாக வெளியேற்றிய மீட்புப் பணியாளர்கள்.

படம்: ராய்ட்டர்ஸ்