சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கும் முகைதீன்

சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கும் முகைதீன்

2 mins read
fcddb9ce-0685-460b-8702-dad7e2d9f0bd
-

கோலா­லம்­பூர்: சாபா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நால்­வர், கட்­சி தாவிய பிற­கும் அவர்­க­ளது தொகு­தி­களில் இடைத்­தேர்­தலை நடத்­தா­மல் அவர்­கள் தொடர்ந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருக்க மலே­சிய நாடா­ளு­மன்­றம் எடுத்த முடிவை எதிர்த்து சட்­ட­

ரீ­தி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்ள இருப்­ப­தாக அந்­நாட்­டின் எதிர்க்­கட்­சித் தலை­வர் முகை­தீன் யாசின் நேற்று தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று நடை­பெற்ற பொதுத் தேர்­த­லுக்கு முன்­பா­கவே திரு முகை­தீன் தலை­மை­யி­லான பெர்­சத்து கட்­சி­ யி­லி­ருந்து விலகி கபுங்­கான் ராக்­யாட் சாபா கட்­சி­யில் இணைந்­து­ விட்­ட­தாக சம்­பந்­தப்­பட்ட நான்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

கட்சி தாவு­வது தொடர்­பாக தேர்­த­லுக்கு முன்பு புதிய சட்­டத்தை மலே­சியா அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன்­படி தேர்­த­லுக்­குப் பிறகு கட்­சித் தாவு­ப­வர்­கள் தங்­கள் நாடா­ளு­மன்றப் பத­வியை இழப்­பர் என்­றும் அவர்­க­ளது தொகு­தி­களில் இடைத்­தேர்­தல் நடத்­தப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தேர்­த­லுக்கு முன்பு அவர்­கள் கட்சி மாறி­னாலோ அல்­லது அவர்­க­ளது கட்சி தனது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்டு இன்­னொரு கூட்­ட­ணிக்கு

ஆத­ரவு தெரி­வித்­தாலோ அவர்

­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என்று புதிய

சட்­டம் குறிப்­பி­டு­கிறது

இந்­நி­லை­யில், முத­லில் பெர்­சத்­து­வு­டன் கூட்­ட­ணி­யில் இருந்த கபுங்­கான் ராக்­யாட் சாபா, பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தலை­மை­யி­லான ஒருமைப்பாட்டு அர­சாங்­கத்­துக்­குத் தனது ஆத­ர­வைத் தெரி­வித்­தது. ஆனால் பெர்­சத்து கட்சி எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

பொதுத் தேர்­த­லுக்கு முன்­பா­க வே அந்த நான்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்சி மாறி­ய­தால் அவர்­கள் தொடர்ந்து நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கப் பதவி வகிக்­க­லாம் என்று நாடாளு­ மன்ற நாய­கர் ஜொஹாரி அப்­துல் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதற்கு திரு முகை­தீன் எதிர்ப்பு தெரி­வித்­தார். தேர்

­த­லுக்கு முன்பு அந்த நான்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்சி மாறி­ய­தா­கக் கூறப்­பட்­டால் பெர்­சத்து கட்­சி­யின் விதி­மு­றை

­க­ளின்­படி, அவர்­க­ளது உறுப்­பி­யம் ரத்து செய்­யப்­படும் என்­றார் அவர்.

கபுங்­கான் ராக்­யாட் சாபா ஓர் அர­சி­யல் கட்சி அல்ல என்­றும் அது பெர்­சத்து கட்சி நிறு­விய கூட்­ட­ணி­யில் இருக்­கும் ஒர் அமைப்பு மட்டுமே என்­றும் திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

எனவே, கபுங்­கான் ராக்­யாட் சாபாவை அர­சி­யல் கட்­சி­யாக ஏற்க முடி­யாது என்­றும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கான விதி­மு­றை­கள் அதற்­குப் பொருந்­தாது என்­றும் அவர் கூறி­னார்.

அது­மட்­டு­மல்­லா­மல், பொதுத் தேர்­த­லில் அந்த நால்­வ­ரும் வெற்றி பெற்­ற­போது அவர்­கள் பெர்­சத்து கட்­சி­யில் இருந்­த­தற்­கான ஆதா­ரம் தம்­மி­டம் இருப்­ப­தாக திரு முகை­தீன் தெரி­வித்­தார்.