தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதியுதவி பெற இலங்கைக்கு இந்தியா ஆதரவு

1 mins read
3a3ae5c1-2f45-4e03-a7cc-7caee5d216bb
-

கொழும்பு: கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்­கைக்கு அனைத்­து­லகப் பண நிதி­யத்திடமி­ருந்து 2.9 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$3.8 பில்­லி­யன்) நிதி­யு­தவி கிடைக்­கக்­கூ­டும்.

இலங்­கை­யின் கடன் மறுசீரமைப்புத் திட்­டத்­துக்கு இந்­தியா ஆத­ரவு தெரி­வித்­ததை அடுத்து, நிதி கிடைப்­ப­தற்­கான சாத்­தி­யம் வலு­வ­டைந்­துள்­ளது.

இலங்­கைக்­குக் கடன் கொடுத்த நாடு­களில் இந்­தி­யா­வும் ஒன்று. இந்­தியா வழங்­கும் ஆத­ரவு குறித்­தும் நிதி­யு­தவி குறித்­தும் கூடு­தல் விவ­ரங்­கள் கூடிய விரை­வில் வெளி­யி­டப்­

ப­டு­ம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் அனைத்­து­ல­கப் பண நிதி­யம் வழங்­கும் நிதி­

யு­தவி இலங்­கைக்­குக் கிடைக்­கும் என்று அந்­நாட்­டின் துணை நிதி அமைச்­சர் ஷேஹன் செம­சிங்க நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கடன் மறுசீரமைப்புத் திட்­டம் தொடர்­பாக இலங்­கைக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யி­லான பேச்­சு ­வார்த்தை நிறை­வ­டைந்­த­தாக இலங்கை அதி­பர் ரணில்

விக்­ர­ம­சிங்க கடந்த வாரம் கூறி­னார். இன்று சீனா­வி­லி­ருந்து பிர­மு­கர்­கள் இலங்­கைக்குச் செல்ல இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் நாளை இலங்­கைக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்ள இருக்­கி­றார்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி­யன்று இலங்கை அதன் 75வது சுதந்­தி­ர தினத்­தைக் கொண்­டாட இருக்­கிறது.