லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னியாவை அண்மை நாள்களாகப் புரட்டிப்போட்ட கனமழை,
வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
அம்மாநிலத்தில் உயிர்ச்சேதம் மட்டுமின்றி அதிகப் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை குறைந்து வருவதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில், நிலைமையை நேரில் காண அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலிஃபோர்னியா செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவை கடந்த மாதம் டிசம்பர் 26ஆம் தேதியி
லிருந்து இடைவிடாது உலுக்கிய கனமழை காரணமாக ஆயிரக்
கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
அவர்கள் இன்னும் துயர்
துடைப்பு மையங்களில் இருப்பதாக கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்தார்.
அதிபர் பைடன் நாளை கலிஃபோர்னியாவுக்குச் சென்று
மீட்புப் பணியாளர்களைச் சந்திக்க இருக்கிறார்.
கனமழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நகரங்
களுக்கு அவர் நேரில் சென்று சேத அளவை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அங்குள்ள பகுதிகளுக்கும் எத்தகைய ஆதரவு வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
அதிபர் பைடன் செல்ல இருக்கும் இடங்கள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. கலிஃபோர்னியாவில் கனமழை பெய்வதற்கு முன்பு அங்கு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது.
சில இடங்களில் வறட்சிநிலை இன்னும் நீடிக்கிறது. மழைக்
காலத்துக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் தண்ணீரைச் சேமிக்கும்படி கலிஃபோர்னியா மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

