சுவா: ஃபிஜியில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவியது. முடிவில் ஃபிரேங்க் பைனிமராமாவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை இழந்தது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக திரு பைனிமராமா ஃபிஜியை ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திரு சிட்டிவேனி ரபுக்கா ஃபிஜியின் பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.
இதற்கிடையே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள புதிய அரசாங்கம் பல மாற்றங்களைக் கொண்டு வருவதாகவும் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்தகைய நடவடிக்கைகளில் அது ஈடுபடக்கூடாது என்றும் ஃபிஜி ராணுவத்
தளபதி மேஜர் ஜெனரல் ஜோன் கலோனிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

