டாவோஸ்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் வெப்பமடைகிறது. இதனால் அனைத்துலக அளவில் கவலை அதிகரித்து இருக்கிறது.
அதோடு, பருவநிலை தொடர்பான வழக்குகளும் உலகளவில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக ஒரு குழு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளியல் அரங்கம் அமைப்பு கூட்டத்தில் பருவநிலை மாற்ற வழக்குகள் தொடர்பான குழு அந்தத் தகவலை வெளியிட்டது.
அந்தக் குழு விவாதத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜாய்மி ஹோ வழி நடத்தினார்.
'நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்! பருவநிலை வழக்குகள் ஏறுமுகம்' என்ற தலைப்பில் குழுவினர் விவாதித்தனர்.
பருவநிலை தொடர்பான நட வடிக்கைகள் இடம்பெற வேண்டு மென விரும்பும் தரப்பினர் வழக்குகளைக் கையில் எடுக்கும் போக்கு கவர்ச்சிகரமான ஓர் உத்தியாக ஆகியிருப்பதாகவும் இந்தப் போக்கு தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 2,000 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில் கால்வாசி கடந்த இரண்டாண்டுகளில் இடம்பெற்றவை என்பதைக் குழு சுட்டியது.

