ஜகார்த்தா: இந்தோனீசியா, போர்னியோ தீவில் புதிய தலைநகரை உருவாக்குகிறது. அங்கு ஆயிரக்கணக்கான அரசு சேவையாளர்கள் இடமாறவிருக்கிறார்கள்.
அதற்காக US$2.7 பில்லியன் (S$3.6 பில்லியன்) மதிப்புள்ள அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டும் பணியை 2023 இரண்டாவது காலாண்டில் இந்தோனீசியா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் தலைநகராக இப்போது ஜகார்த்தா இருக்கிறது. புதிய தலைநகர் போர்னியோ தீவில் காட்டுவளப் பகுதி ஒன்றில் US$32 பில்லியன் செலவில் உருவாகும் என்று 2019ஆம் ஆண்டு திட்டம் ஒன்றை இந்தோனீசியா அறிவித்தது.
புதிய தலைநகருக்கு 'நுசாந்தாரா' என்று பெயரிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

