நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இலக்கு

2 mins read
ca5193cf-b488-4c03-831b-665e11af9bf7
புத்ராஜெயா: மலே­சி­யாவை முன்­னேற்­றப் பாதை­யில் கொண்டு செல்­லும் இலக்­கு­டன் நாட்­டிற்­கா­கப் புதிய முழக்­க­வ­ரியை அந்­நாட்­டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். படம்: மைமெட்ரோ -

புத்ராஜெயா: மலே­சி­யாவை முன்­னேற்­றப் பாதை­யில் கொண்டு செல்­லும் இலக்­கு­டன் நாட்­டிற்­கா­கப் புதிய முழக்­க­வ­ரியை அந்­நாட்­டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

'மலே­சியா மடானி' எனும் அந்த முழக்­க­வரி பொறுப்­பு­ணர்வு, வெளிப்­ப­டைத்­தன்மை ஆகி­ய­வற்றை முக்­கிய கொள்­கை­

க­ளா­கக் கொண்­டுள்­ளது என அவர் தெரி­வித்­தார்.

மடானி எனும் மலாய்ச் சொல்­லுக்கு நாக­ரிகம் அல்­லது நவீ­னம் என்று பொருள். நேற்று புத்­ரா

­ஜெ­யா­வில் திரு அன்­வார் பேசி­ய­போது, நீடித்த நிலைத்­தன்மை, பரிவு, இரக்­கம், மரி­யாதை, புத்­தாக்­கம், செல்வச் செழிப்பு, நம்­பிக்கை ஆகி­ய­வற்­றுக்­கான மலாய் சொற்­க­ளின் சுருக்­கமே இந்த மடானி என்று தெரி­வித்­தார்.

இனப் பாகு­பா­டின்றி மலே­சி­யர்­கள் அனை­வ­ருக்­கும் உதவி வழங்­கப்­படும் என்று திரு அன்­வார் உறுதி அளித்­தார்.

இனம், சம­யம் ஆகி­யவை தொடர்­பாக மலே­சி­யர்­க­ளின் மனப்­போக்கை மாற்றி அமைக்க தாம் விரும்­பு­வ­தாக இரண்­டு மாதங்­க­ளுக்கு முன்பு பிர­த­மர் பத­வியை ஏற்ற திரு அன்­வார் கூறி­னார்.

இதற்கு முன்பு இனம், சம­யம் அடிப்­ப­டை­யில் மலே­சிய அர­சி­யல் சூழல் இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"மலே­சி­யா­வில் பெரும்­பான்மை இனத்­த­வர்­கள் மலாய்க்­கா­ரர்­களே. இவர்­கள் தொடர்ந்து நாட்­டின் முக்­கிய தூணாக இருப்­பர். மலே­சி­யா­வில் இஸ்­லாத்­துக்­கும் மலாய் மொழிக்­கும் மலாய் உரி­மை­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், நாங்­கள் பல இன மக்களைக் கொண்ட நாடா­கத் திகழ்­கி­றோம்.

"சிறு­பான்மை இனத்­த­வர்­கள், வசதி குறைந்­த­வர்­கள், கிரா­மங்­களில் வசிப்­ப­வர்­கள், சாபா மற்­றும் சர­வாக் மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளைப் பின்­தங்க வைத்­து­விட்டு நாட்டை மேம்­

ப­டுத்த விரும்­ப­வில்லை," என்­றார் திரு அன்­வார்.

திரு அன்­வார் தலை­மை­

யி­லான அர­சாங்­கம் பல இன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கூட்­ட­ணி­யால் அமை­க் ­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும்,

பிர­த­மர் பத­வி­யில் நீடிக்க மலாய்-முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரின் ஆத­ரவு தமக்கு அவ­சி­யம் என்­பது திரு அன்­வா­ருக்­குத் தெரி­யும்.

"மலே­சி­யா­வின் பொரு­ளி­யல் துடிப்­பு­டன் மேம்­பட வேண்­டும். அதே சம­யம் மலே­சி­யர்­கள் யாரும் பின்­தங்­கி­வி­டக்­கூ­டாது. அர­சாங்­கம் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்.

"முன்பு செய்த தவ­று­க­ளைச் சரி­செய்­தால் நாட்­டைக் காப்­பாற்றி­வி­ட­லாம்.

"மலே­சி­யாவை மீண்டும் புக­ழின் உச்­சத்­துக்­குக் கொண்டு செல்­ல­லாம்," என்று புத்­ரா­ஜெயா அனைத்­து­லக மாநாட்டு மையத்­தில் திரு அன்­வார் வலி­யு­றுத்­தி­னார். நேற்று நடை­பெற்ற அந்த நிகழ்­வில் மலே­சிய அமைச்­சர்­கள், மூத்த அரசு ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

நேற்­றைய நிகழ்­வில் திரு அன்­வார் புனைந்த 'டெவ­லப்­பிங் எ மடானி நேஷன்' எனும் தலைப்­பி­லான நூலும் வெளி­யி­டப்­

பட்­டது.