கூச்சிங்: மலேசியாவின் சாபா, சரவாக் மாநிலங்களின் எல்லைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 1 பில்லியன் ரிங்கிட் (S$309 மில்லியன்) வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அவ்விரு மாநிலங்களின் எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும் எல்லைப் பகுதியில் உள்ள சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்
படுத்துதல், பாதுகாப்பு மையத்தின் ஆற்றலை அதிகரிப்பதற்காவும் கூடுதலாக 1 பில்லியன் ரிங்கிட் வழங்க மலேசிய நிதி அமைச்சு ஒப்பதல் வழங்கியுள்ளது. போர்னியோ தீவில் இருக்கும் சாபா, சரவாக் மாநிலங்கள் இந்தோனீசியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.
போர்னியோவின் இந்தோனீ
சியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி கலிமந்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தோனீசியாவின் புதிய தலைநகராக கலிமந்தானில் உள்ள நுசந்தாராவை அமைக்க அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவருடன் கலந்துரையாடிய பிறகு சாபாவுக்கும் சரவாக்கிற்கும் எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதி வழங்க ஒப்பந்தல் வழங்கியதாக திரு அன்வார் தெரிவித்தார்.
வழக்கற்றுப்போன அணுகு
முறையைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற அவபெயர் மலேசியாவுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு எடுத்ததாக திரு அன்வார் கூறினார்.

