சீனாவில் 80 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று

சீனாவில் 80 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று

1 mins read
1fd81871-5a41-44b0-b1b0-1f59e112fe6c
-

பெய்­ஜிங்: அடுத்த இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் சீனா­வில் கொவிட்-19 மீண்­டும் பெரிய அள­வில் பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம் குறைவு என்று பிர­பல அர­சாங்க ஆராய்ச்­சி­யா­ளர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

ஏனெ­னில் அங்கு கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­னர் ஏற்­கெ­னவே கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­விட்­ட­தாக அவர் சொன்­னார்.

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு மக்­கள் பெரு­ம­ள­வில் பய­ணங்­களை மேலும் இந்­தக் காலக்­கட்­டத்­தில் கிரு­மிப் பர­வல் மீண்­டும் பெரிய அள­வில் தலை­தூக்­கும் என்று அச்­சம் நில­வு­கிறது. ஆனால், குறு­கிய கால­கட்­டத்­தில் இரண்­டா­வது அலைக்கு வாய்ப்பு குறைவு என்று தொற்­று­நோ­யி­யல் நிபு­ணர் வு ஜுன்யூ கூறி­னார்.

சீனா­வில் கொவிட்-19 உச்­சத்­தைக் கடந்­து­விட்­ட­தாக தேசிய சுகா­தார ஆணை­யம் வியா­ழக்­கி­ழ­மை­யன்று சொன்­னது.

கிரு­மித் தொற்­றைத் துடைத்­தொ­ழிக்­கும் கொள்­கையை சீனா கைவிட்ட பிறகு, மருத்­து­வ­ம­னை­களில் கிட்­டத்­தட்ட 60,000 பேர் மாண்­டு­விட்­ட­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன.