மலேசியாவில் ஐந்து மாநிலங்களில் மழை புதன்கிழமைவரை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஜோகூர், சாபா, சரவாக், பாஹாங், திரங்கானு ஆகிய மாநிலங்களில் மழை தொடர்ச்சியாக பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள மெர்சிங், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, செகாமாட் ஆகிய இடங்களில் மழை புதன்கிழமைவரை நீடிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

