தலைகுப்புறக் கவிழ்ந்து, வெடித்துச் சிதறிய வேன்; குழந்தைகள் உட்பட 11 பேர் கருகி பலி

தலைகுப்புறக் கவிழ்ந்து, வெடித்துச் சிதறிய வேன்; குழந்தைகள் உட்பட 11 பேர் கருகி பலி

1 mins read
e0811f75-0035-4074-8309-454c4995ddcf
-
Google News Preferred Icon

பேங்­காக்: மத்­திய தாய்­லாந்­தில் சீனப் புத்­தாண்டு விடு­முறை தினத்­தில் நிகழ்ந்த சாலை விபத்­தில் இரு குழந்­தை­கள் உட்­பட 11 பேர் உயி­ரி­ழந்­த­தாக காவல்­

து­றை­யி­னர் நேற்று கூறினர்.

தாய்­லாந்­தில் சாலை விபத்­து ­கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. சாலைப் பாது­காப்பு அங்கு மோச­மாக இருக்­கும். குறிப்­பாக, விடு­முறை தினங்­களில் வாகன நட­மாட்­டம் மிகுந்­தி­ருக்­கும்­போது அதிக விபத்­து­கள் நடக்­கின்­றன.

அந்த வகை­யில், வட­கி­ழக்கு அம்­னாட் சரோ­யன் மாநி­லத்­தில் இருந்து நாட்­டின் தலை­ந­கர் பேங்­காக் நோக்கி 12 பேரு­டன் சென்று கொண்டு இருந்த வேன் ஒன்று சனிக்­கி­ழமை இரவு விபத்­தில் சிக்­கி­யது.

விரை­வுச்­சா­லை­யில் சென்­று­கொண்­டி­ருந்த வேன், ஓட்­டு

­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து சாலை­யை­விட்டு விலகி ஓடி­யது. தலை­குப்­புறக் கவிழ்ந்­த­தும் வேன் தீப்­பற்றி எரிந்­தது.

20 வயது மாண­வர் மட்­டும் வேனின் சன்­னல் பகுதி வழி­யாக தப்பி வெளியேறினார். மற்ற 11 பேரும் தீயில் கருகி மாண்­ட­தாக காவல்­துறை அதி­காரி யிங்­யோஸ் போல்­டெஜ் தெரி­வித்­தார்.

வேனில் தாம் தூங்­கிக்­கொண்டு இருந்­த­போது அல­றல் சத்­தம் கேட்டு எழுந்­த­தா­க­வும் உட­ன­டி­யாக சன்­னலை உதைத்­தா­க­வும் உயி­ர்தப்­பிய இளை­யர் கூறி­னார்.

சன்­னலை உடைத்து தாம் வெளி­யே­றிய சில வினா­டி­களில், ஏற்­கெ­னவே தீயில் எரிந்து கொண்­டி­ருந்த வேன் வெடித்­துச் சித­றி­ய­தா­க­வும் அவர் தெரி­வி­த் தார்.