யங்கூன்: மியன்மாரின் தெற்குப் பகுதியில் அந்நாட்டின் ராணுவத்துக்கும் போராளி அமைப்புகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வருகிறது.
வன்முறைக்குப் பயந்து அப்
பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்
கணக்கான மக்கள் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மியன்மார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்ததில் அங்கு வன்முறை தாண்டவம் ஆடுகிறது.
மக்கள் தற்காப்புப் படைகள் போன்ற நீண்டகாலமாகப் போராடி வரும் போராளி அமைப்பு கள் ராணுவத்துடன் அடிக்கடி மோதுகின்றன.
அண்மைய சில நாள்களாக மியன்மாரின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கெரன்
மாநிலத்திலும் எல்லை நகரமான பயதோன்சுவிலும் கியோன்னெடோ நகரிலும் சண்டை
தீவிரம் அடைந்துள்ளது.
கியோன்னெடோ நகரில் உள்ள ராணுவத் தளம் மீது மக்கள் தற்காப்புப் படைகள் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக மியன்மார் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போராளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ராணுவம் ஆங்காங்கே பீரங்கிகளால் சுட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
கியோன்னெடோ நகரம் 5,000 மக்கள்தொகையைக் கொண்டது. ராணுவமும் போராளிகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்துவதால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
“இரவு முழுவதும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. வீட்டில் இருக்கவும் பயமாக இருக்கிறது. அந்தப் பயங்கரத்தைச் சொற்
களால் வர்ணிக்க இயலாது,” என்று பெயர் சொல்ல விரும்பாத நகரவாசி ஒருவர் செய்தியாளர்
களிடம் தெரிவித்தார்.
தாய்லாந்துடனான எல்லைக்கு அருகில் இருக்கும் பயதோன்சு நகரில் உள்ள பல அரசாங்கக் கட்டடங்களுக்கு கெரன் போராளி அமைப்பு தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது.
அவற்றில் குடிநுழைவு, ராணுவ உளவியல் பிரிவு ஆகியவற்றின் கட்டடங்களும் அடங்கும்.