ஜோகூரில் வெள்ளம்: 1,093 பேர் வெளியேற்றம்

ஜோகூரில் வெள்ளம்: 1,093 பேர் வெளியேற்றம்

1 mins read
57d734c0-b3bc-49d6-b98d-34290cdd2b20
தொடர்ந்து பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யால் ஜோகூ­ரில் உள்ள பயா மேரா லாமா கிரா­ம­மும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் கிராமத்திலிருந்து நான்கு பேர் அவர்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து பத்திரமாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். படம்: சீன ஊடகம் -

செகா­மட்: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாக 1,093 பேர் வெளியேற்றப்பட்டு தற்­கா­லிகத் துயர்­து­டைப்பு மையத்­தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

செகாமட், கோத்தா திங்கி, குளுவாங் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தெனாங் லாபிஸ் கிரா­மத்­தி லிருந்து 413 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

"அந்­தக் கிரா­மத்­தில் 119 குடும்­பங்­கள் உள்­ளன. மொத்­தம் 413 கிரா­ம­வா­சி­கள் உள்­ள­னர். அவர்­களில் 16 பேர் உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள், 39 பேர் முதி­ய­வர்­கள், எட்டு குழந்­தை­கள்," என்று ஜோகூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை­யின் இடைக்­கால இயக்­கு­நர் முகம்­மது ரீசால் புவாங் நேற்று தெரி­வித்­தார்.

தொடர்ந்து பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யால் ஜோகூ­ரில் உள்ள பயா மேரா லாமா கிரா­ம­மும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்தக் கிராமத்திலிருந்து நான்கு பேர் அவர்­க­ளது வீடு­

க­ளி­லி­ருந்து பத்திரமாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

பெக்­கான் ஆயர் பானாஸ் கிரா­மத்­தி­லி­ருந்து 70 வயது முதி­ய­வர் ஒரு­வர் மீட்­கப்­பட்டு துயர்­து­டைப்பு மையத்­தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு ரீசால் புவாங் கூறி­னார்.

ஜோகூ­ரில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய 432 இடங்­களை அதி­கா­ரி­கள் அடை­யா­ளம் கண்­டுள்­ள­தா­க­வும் அவற்றை மிகவும் உன்­னிப்

­பா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.