மலாக்கா: மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் போதைப்பொருள் கலந்த குளிர்பானங்களை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு தம்பதியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு போத்தலுக்கு 300 ரிங்கிட் (S$92) என அந்தக் குளிர்பானங்களை அவர்கள் விற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆரோக்கிய பானங்கள் என்று கூறி போதைப்
பொருள் கலந்த பானங்களை அவர்கள் 150 ரிங்கிட்டுக்கு விற்றதாக மலாக்கா காவல்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட 34 வயது ஆடவரின் 28 வயது மனைவி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. இருவரையும் வெவ்வேறு இடங்களில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகியவற்றில் உள்ள கடத்தல் கும்பல்
களிடமிருந்து இத்தம்பதியர் பெருமளவிலான போதைப்
பொருளை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 3,600க்கும் அதிகமான குளிர்பானங்களைத் தயாரிக்கத் தேவையான போதைப்பொருளை அவர்கள் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தம்பதியர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று சீறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.