சான் ஃபிரான்சிஸ்கோ: ஐபிஎம் நிறுவனம் அதன் உலகளாவிய ஊழியர் அணியில் 1.5 விழுக்காட்டைக் குறைக்கப் போவதாகக் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு தொழில்நுட்பப் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருவதை அடுத்து ஐபிஎம் நிறுவனமும் அவ்வாறு அறிவித்துள்ளது.
ஏறத்தாழ 3,900 ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவர் என்று நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி ஜேம்ஸ் காவனாவ் நேற்று முன்தினம் கூறினார்.
அந்நடவடிக்கைக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (S$394 மி.) செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெர் மனியைச் சேர்ந்த எஸ் அண்ட் பி (S&P) மென்பொருள் பெருநிறுவனம் சுமார் 3,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது. தனது ஊழியரணியில் 2.5 விழுக்காட்டினர் அதனால் பாதிக்கப்படுவர் என்று எஸ்அண்ட்பி கூறியது.
அந்நிறுவனத்தில் தற்போது உலகம் எங்கும் 12,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

