அன்வார்: சமயக்கல்வியில் மாற்றம் தேவை

அன்வார்: சமயக்கல்வியில் மாற்றம் தேவை

1 mins read
d23ae8d6-1f0d-4d30-b713-a35d106e835b
-

கோலா­லம்­பூர்: மலே­சி­ய பள்­ளி ­க­ளி­லும் உயர்­கல்வி நிலை­யங்­ க­ளி­லும் இஸ்­லா­மிய சம­யக் கல்வி, பொது­வா­ன பண்­பு­க­ளை­யும் மனி­த­நே­யத்­தை­யும் வலி­யு­றுத்­தும் வகை­யில் மறுஆய்வு செய்­யப்­பட வேண்­டும் என்று அந்­நாட்டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ ரா­கிம் கூறி­யுள்­ளார்.

மலே­சியா பல இன, பல சமய நாடாக தொடர்ந்து நீடிப்­பதை உறு­தி­செய்ய, ­மக்­க­ளி­டையே சம­யங்­க­ளைப் பற்­றிய மேம்­பட்ட புரிந்­து­ணர்வு இருக்கவேண்­டும் என்று அவர் நேற்று கூறி­னார். அனைத்­து­லக இஸ்­லா­மி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஒரு நூல் வெளி­யீட்­டில் அவர் கலந்­து­கொண்­டார்.

பொதுப்­ப­டை­யான பண்­பு­கள், ஒழுக்­கம் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் இஸ்­ லாமியக் கல்­விப் பாடத்திட்­டம் மாற்­றப்­பட வேண்­டும் என்று முக்­கிய சமயக் கல்­வி­மான்­கள் பரிந்­து­ரைத்­துள்­ள­தாக திரு அன்­வார் குறிப்பிட்டார்.

முஸ்­லிம்­கள் பெரும்­பான்மை வகிக்­கும் மலே­சியா அண்­மைய ஆண்­டு­களில் பழை­மை­வா­தப் போக்­குக்கு மாறி­யுள்­ளது. கல்வி நிலை­யங்­களில் இஸ்­லா­மி­யக் கல்வியில் அச்­ச­ம­யம் குறித்த குறு­கிய பார்வை கற்­றுத்­த­ரப் படு­வ­தும் அதற்­கான கார­ணங்­களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

திரு அன்­வார், 'மலே­சியா மடானி' எனும் தமது புதிய அர­சாங்­கத்­துக்­கான முழக்­க­வ­ரி­யைக் கடந்த வாரம் வெளி­யிட்­டார். 'மடானி' எனும் சொல் அரபு மொழி­யில் நவீ­னத்­தைக் குறிக்­கிறது. மலேசியாவில் இனம், சமயம் பற்றிய பார்வையை மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.