தோக்கியோ: ஜப்பான் கடற்பகுதியில் சீனக் கப்பல் ஒன்று மூழ்கியதில் எட்டுப் பேர் உயிர் இழந்தனர். அவர்களில் ஆறு பேர் சீனக் குடிமக்கள் ஆவர்.
ஜப்பானின் ஃபுக்குவோக்கா நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத் தலைமை அதிகாரி லூ குஹ்ஜுன், சீனாவின் சிஜிடிஎன் தொலைக்காட்சியிடம் இதைத் தெரிவித்தார்.
தென்மேற்கு ஜப்பானியக் கடற்பகுதியில் யாரும் வசிக்காத டாஞ்சோ தீவுகள் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை. ஜின் டியன் எனும் கப்பல் உதவி கோரி அழைத்தது. ஜப்பானிய, தென்கொரிய கடற்படைகளும் தனியார் கப்பல்களும் அக்கப்பலைத் தேடிவந்தன.
அச்சம்பவத்தில் 13 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காப்பாற்றப்பட்ட ஐவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் திரு லூ தெரிவித்தார்.
மாண்ட மற்ற இருவர் மியன்மார் நாட்டவர் என்று ஜப்பானியக் கடற்படை கூறியது.