ஜப்பான் கடலில் மூழ்கிய கப்பல்

ஜப்பான் கடலில் மூழ்கிய கப்பல்

1 mins read
b28f59d1-22b5-431a-903a-0fccc6037824
-

தோக்­கியோ: ஜப்­பான் கடற்­ப­கு­தி­யில் சீனக் கப்­பல் ஒன்று மூழ்­கி­ய­தில் எட்­டுப் பேர் உயிர் இழந்­த­னர். அவர்­களில் ஆறு பேர் சீனக் குடி­மக்­கள் ஆவர்.

ஜப்­பா­னின் ஃபுக்கு­வோக்கா நக­ரில் உள்ள சீனத் துணைத் தூத­ர­கத் தலைமை அதி­காரி லூ குஹ்­ஜுன், சீனா­வின் சிஜி­டி­என் தொலைக்­காட்­சி­யி­டம் இதைத் தெரி­வித்­தார்.

தென்மேற்கு ஜப்­பா­னியக் கடற்­ப­கு­தி­யில் யாரும் வசிக்­காத டாஞ்சோ தீவு­கள் அருகே கடந்த செவ்­வாய்க்கிழமை மாலை. ஜின் டியன் எனும் கப்­பல் உதவி கோரி அழைத்­தது. ஜப்­பா­னிய, தென்­கொ­ரிய கடற்­ப­டை­களும் தனி­யார் கப்­பல்­களும் அக்­கப்­ப­லைத் தேடிவந்­தன.

அச்­சம்­ப­வத்­தில் 13 பேர் கண்டுபிடிக்­கப்­பட்­ட­தா­க­வும் காப்­பாற்­றப்­பட்ட ஐவ­ரின் உயி­ருக்கு ஆபத்­தில்லை என்­றும் திரு லூ தெரி­வித்­தார்.

மாண்ட மற்ற இரு­வர் மியன்­மார் நாட்­ட­வர் என்று ஜப்­பா­னி­யக் கடற்­படை கூறி­யது.