அன்டனநாரிவோ: மடகாஸ்கரை உலுக்கிய புயலால் குறைந்தது 16 பேர் மாண்டுவிட்டனர்.
17 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 19ஆம் தேதியன்று புயல் கரையைக் கடந்தது.
புயல் காரணமாக மழை இடைவிடாது பெய்ததாகவும் மடகாஸ்கர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

