ஜெருசலம்: காஸாவிலிருந்து பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காஸா நகரை இஸ்ரேலியப் போர் விமானங்கள் தாக்கின.
அண்மையில் மேற்குக் கரையில் மிக மோசமான வன்முறை வெடித்தது. பெரிய அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளைக் கைது செய்ய அங்கு சென்றதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
அப்போது இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒன்பது பாலஸ்தீனர்கள் மாண்டனர்.

