ஜெருசலம்: கிழக்கு ஜெருசலமில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் காயமடைந்தனர்.
நெவ் யாகோவ் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இச்சம்பவம் நடந்தது. அவசர அழைப்பைத் தொடர்ந்து அங்கு சென்ற இஸ்ரேலிய காவல்துறையினர், தப்பியோட முயன்ற துப்பாக்கிச் சுடு நடத்தியவரைச் சுட்டுக்கொன்றனர்.
மேலும் அவர் 21 வயது இளையர் என்றும் இச்சம்பவத்தில் அவர் தனியாக செயல்பட்டதாகவும் அவர்கள் கூறினர். உள்ளூர் ஊடகங்கள் தாக்குதல் நடத்தியவரைக் கிழக்கு ஜெருசலமைச் சேர்ந்த பாலஸ்தீனியர் என அடையாளம் கண்டுள்ளன.
மேலும், இதுதொடர்பான விசாரணைக்காக தாக்குதல் நடத்தியவரின் குடும்ப உறுப்பினர்கள், அண்டைவீட்டார் என 42 பேர் கைது செய்யப்பட்டுள்ள
னர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய காவல்துறைய ஆணையாளர் கோபி ஷப்தாய், "அண்மைய ஆண்டுகளில் நாங்கள் சந்தித்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று இது," என்று கூறினார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின்போது பாலஸ்தீனர்கள் 9 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலில் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

