'எங்க வீட்டுப் பிள்ளை' எம்ஜிஆர் சொல்வதுபோல் செயல்பட மலேசியப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

'எங்க வீட்டுப் பிள்ளை' எம்ஜிஆர் சொல்வதுபோல் செயல்பட மலேசியப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

1 mins read
d1a0ff0d-104f-4a27-840e-ee68d1004aca
-
multi-img1 of 3

ஈப்போ: நடி­க­ரும் முன்­னாள் தமி­ழக முதல்­வ­ரு­மான எம்­ஜி­ஆர், 'எங்க வீட்­டுப் பிள்ளை' திரைப்­படத்­தில் இடம்­பெ­றும் 'நான் ஆணை­யிட்­டால்' பாட­லில் சொல்­வ­தைப்­போல் தலை­வர்­கள் செயல்­பட வேண்­டும் என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

தம்­புன் நாடா­ளு­மன்­றத் தொகுதி உறுப்­பி­ன­ரான திரு அன்­வார், கிளெ­பாங்கில் நேற்று நடந்த பொங்­கல் கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்­ற­போது அப்­பா­டல் ஒலி­ப­ரப்­பப்­பட்­டது. அப்­பா­ட­லில் சில வரி­க­ளைப் பாடி­ய­பின் பேசத் தொடங்­கிய அவர், மக்­க­ளை­யும் அவர்­தம் கண்­ணீ­ரைத் துடைப்­ப­தை­யும் தலை­வர்­கள் மறக்­கக்­கூடாது என்­பதை அந்­தப் பாடல் விளக்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார். தலை­வர்­களே மக்­க­ளுக்கு இடையே சண்­டை­மூட்டி விடு­கின்­ற­னர் என்­றும் அத­னால் பாதிக்­கப்­ப­டு­வது மக்­கள்­தான் என்­றும் அவர் சொன்­னார்.