ஜெருசலம் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம்

ஜெருசலம் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம்

1 mins read
35288582-b8a8-4b9f-83e9-8ca0ae9444d1
-

டெல் அவிவ்: ஜெரு­ச­ல­மில் உள்ள யூத வழி­பாட்­டுத் தலத்­திற்கு வெளியே கடந்த வெள்­ளிக்­கி­ழமை நிகழ்த்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு சிங்­கப்­பூர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

"உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம். காய­ம­டைந்­த­வர்­கள் விரைந்து நலம்­பெற வாழ்த்­து­கி­றோம்," என்று ஓர் அறிக்கை வழி­யாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இஸ்­ரே­லின் நெவே யாக்­கோவ் குடி­யேற்­றப் பகு­தி­யில் உள்ள அந்த ஆல­யத்­திற்கு அருகே 21 வயது பாலஸ்­தீ­னி­யர் ஒரு­வர் கண்­மூ­டித்­த­ன­மா­கத் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் எழு­வர் கொல்­லப்­பட்­ட­னர்.

மறு­நாள் சனிக்­கி­ழமை நிகழ்ந்த இன்­னொரு துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 வயது சிறு­வன் உயி­ரி­ழந்­தான்; இரு­வர் காயம் அடைந்­த­னர்.

இத­னை­ய­டுத்து, தன் நாட்டு மக்­கள் துப்­பாக்கி வைத்­தி­ருப்­பதை எளி­தாக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இஸ்­ரேல் பாது­காப்பு அமைச்சு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. மேலும், 'பயங்­க­ர­வாதி' களு­டைய குடும்­பத்­தி­ன­ரின் சில உரி­மை­க­ளைப் பறிக்­க­வும் இஸ்­ரேல் அர­சாங்­கம் முடிவு செய்­துள்­ளது.