கியவ்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ரஷ்யாவை விலக்கி வைக்க வேண்டும், இல்லையேல் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இருக்கும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியிருந்தார்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் மறுத்துவிட்டது.
ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான மாற்று வழிகள் ஆராயப்படும் என்று மன்றம் கூறியுள்ளது.
இதனால் ஏமாற்றமடைந்துள்ள உக்ரேன், போரை அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் ஊக்குவிக்கிறது என்று கண்ணீர்விடாத குறையாகக் கூறியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் உக்ரேனுக்கு ஜெர்மானிய போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று ஜெர்மானிய அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பின் வாங்கியுள்ளார்.

