கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப்பெரிய கட்சியான அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், தாம் ஒரு நாள் நாட்டின் பிரதமராக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அம்னோ முன்னாள் இளையர் பிரிவுத் தலைவரான அவரை, கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியதாகச் சொல்லி அம்னோ தலைமை நீக்கியது.
கடந்த 23 ஆண்டுகளாக அம்னோவில் இருந்த கைரி, ஒருநாள் நாட்டை வழி நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். "அது எப்படி நடக்கும் என்பதை இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. மக்கள் பின்பற்றுவதற்கு பல பாதைகள் இருக்கின்றன. ஆனால் நான் நாட்டை வழி நடத்த விரும்பு கிறேன்," என்று கைரி கூறினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"முன்னாள் தற்காப்பு அமைச் சரான ஹிஷாமுதீன் உசேன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் கட்சியி லிருந்து நீக்கப்படவில்லை. இல்லையென்றால் அவரும் விலக்கப்பட்டிருக்கலாம்," என்று கைரி மேலும் தெரிவித்தார்.
அம்ேனாவின் முன்னாள் உதவித் தலைவரான ஹிஷாமுதீன் உேசன் உட்பட பல கட்சி உறுப் பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு அதிரடியாக இைட நீக்கம் ெசய்யப்பட்டுள்ளனர்.
இதனால் அம்னோ கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

