லண்டன்: ஜி7 நாடுகளில்
பிரிட்டன் மட்டுமே இவ்வாண்டில் பொருளியல் மந்தநிலையால் பாதிக்கப்படும் என்று அனைத்
துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி7 நாடுகளில் பிரிட்டனின் பொருளியல் மட்டுமே இவ்வாண்டு 0.6 விழுக்காடு சரிவு காணும் என்று அது கூறியது.
இதற்கு முன்பு பிரிட்டனின் பொருளியல் 0.9 விழுக்காடு சுருங்கும் எனக் கடந்த அக்டோபர் மாதத்தில் நிதியம் முன்
னுரைத்திருந்தது. வட்டி விகித அதிகரிப்பு, கூடுதல் வரி, அரசாங்கத்தின் செலவினக் குறைப்புத் திட்டம் ஆகியவற்றால் பிரிட்டனில் வாழ்க்கைச் செலவினம் கட்டுக்கடங்காமல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை இவை தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
இருப்பினும், அனைத்துலகப் பண நிதியம் கூறும் அளவுக்கு பிரிட்டனின் பொருளியல் நிலை மோசமாக இருக்காது என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
"அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்தது போல பிரிட்டனில் ஏற்படும் பொருளியல் மந்தநிலை மோசமாக இருக்காது என்று இங்கிலாந்து வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது.
"கிட்டத்தட்ட அனைத்துப் பணக்கார நாடுகளின் பொருளி
யலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள் பிரிட்டனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதி
லிருந்து முழுமையாகத் தப்பிக்க முடியாது. இருப்பினும், இத்
தகைய குறுகியகால சவால்
களைக் கண்டு நீண்டகால
வாய்ப்புகளை மறந்துவிடக்
கூடாது," என்று திரு ஹன்ட் கூறினார்.
பிரிட்டனின் பொருளியல் 2024ஆம் ஆண்டில் மெதுவாக மீண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் வளர்ச்சி அடிப்படையில் ஜி7 நாடுகள் பட்டியலில் ஆகக் கடைசியில் இருக்கும் ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஈடாக பிரிட்டனின் பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னுரைப்பு உண்மையானால் கொவிட்-19 நெருக்கடிநிலையைக் கணக்கில் சேர்க்காமல் 2009ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு இதுவே பிரிட்டனில் ஏற்படும் முதல் பொருளியல் மந்தநிலையாகும்.
அவ்வாறு நேர்ந்தால் இவ்வாண்டிலிருந்து பொதுத் தேர்தல் நடக்கும் வரை பிரிட்டிஷ் பொருளியல் வெறும் 0.3 விழுக்காடு வளர்ச்சி காணும்.
இந்நிலையில், மற்ற ஜி7 நாடுகளின் பொருளியல் குறித்து முன்வைக்கப்பட்ட முன்னுரைப்பை அனைத்துலகப் பண நிதியம் குறைக்கவில்லை.

