பெர்லின்: ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் ரயில் ஒன்று மோதித் தள்ளியதில் சிறுவர் ஒருவர் மாண்டார். இன்னொரு சிறுவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
பல சிறுவர்கள் மீது அந்த ரயில் மோதி அவர்களை இழுத்துச் சென்றதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து அது கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. சிறுவர்களை அந்த சரக்கு ரயில் பல நூறு மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றதாக ஜெர்மன் ஊடகம் தெரிவித்தது. இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது என்று இன்னும் தெரியவில்லை.

