தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசமான காற்றுத் தரம்: 3வது இடத்தில் பேங்காக்

2 mins read
39c121a1-7b6a-4c21-bc1e-8bc0d386d3b7
-

பேங்­காக்: காற்று மாசு­பாடு மோச­ம­டைந்­துள்­ள­தால் தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் பள்­ளிக்­கூ­டங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டன.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பேங்­காக், அத­னைச் சுற்­றிய 43 பகு­தி­க­ளி­லும் புகை­மூட்­டம் சூழ்ந்­தி­ருந்­த­தாக பேங்­காக் போஸ்ட் தக­வல் கூறு­கிறது.

பிஎம்2.5 அள­வில் காற்று தூய்­மைக்­கேடு குறி­யீடு ஒரு கன மீட்­ட­ருக்கு 54 முதல் 119 மைக்­ரோ­

கிரா­மாக உள்ள நிலை­யில், வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அங்கு பள்­ளிக்­கூ­டங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டன.

மாண­வர்­க­ளுக்கு சுவாசப் பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் விடு­முறை அறி­வித்­துள்­ள­தாக பது­வ­மான் மாவட்­டத்­தில் உள்ள உயர்­நி­லைப் பள்ளி ஒன்று சொன்­னது.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று விடு­முறை அறி­வித்­தி­ருந்த நவ் யாவ் மாவட்ட பள்­ளிக்­கூ­டம் ஒன்று திங்­கட்­கி­ழமை மீண்­டும் திறக்­கப்­படும் என்று கூறி­யுள்­ளது.

காற்­றின் தரத்­தைக் கண்­காணிப்­ப­தற்­காக கல்வி அமைச்சு, பல்­வேறு இடங்­களில் ஒருங்­கி­ணைப்பு மையங்­களை அமைத்­துள்­ளது.

காற்று மாசு­பாடு கார­ண­மாக ஏற்­பட்ட சில வகை­யான உடல்­நலக் கோளா­று­க­ளால் இந்த வாரம் மட்டும் 376,165 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சென்ற வாரம் இது 163,000ஆக இருந்தது.

அண்மையில் பாதிக்கப்பட்டவர் களில் 165,000 பேர் சுவா­சப் பிரச்­சி­னை­களுக்கு ஆளாகியிருந்ததாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

IQAir.com என்ற இணை­யத்­தளத் தரவு அடிப்­ப­டை­யில், சென்ற வியா­ழ­னன்று காலை 9 மணி நில­வரப்­படி, பேங்­காக்­கின் காற்­றுத் தரக் குறி­யீடு 198ஆக இருந்­தது. எனவே, காற்று மாசு­பாடு மோச­மாக உள்ள மூன்­றா­வது நக­ர­மானது பேங்­காக்.

இந்­தி­யா­வின் மும்பை நகர காற்­றுத் தரக் குறி­யீடு 207ஆக­வும் பாகிஸ்­தா­னின் லாகூர் நக­ரத்­தில் இது 202ஆக உள்­ள­தா­க­வும் தாய்­லாந்து நாளி­த­ழான தி நேஷன் தெரி­வித்­துள்­ளது.